Home Cinema News Dhanush: என்னோட படத்தில அந்த பொண்ணு மட்டும் வேண்டாம் – பிடிவாதமாய் மறுத்த தனுஷ்!

Dhanush: என்னோட படத்தில அந்த பொண்ணு மட்டும் வேண்டாம் – பிடிவாதமாய் மறுத்த தனுஷ்!

0

Dhanush: கோலிவுட் திரையுலகில் தனது பன்முக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தனுஷ். பலவெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்து ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகிறார். கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணி வெற்றி கூட்டணி என்றே சொல்லலாம். நீண்ட வருடங்கள் கழித்து தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு யுவன்ஷங்கர் ராஜா, செல்வராகவன், மற்றும் தனுஷ் கூட்டணி இணைகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்.

தனுஷ் தற்போது நடிக்கும் நானே வருவேன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். அதோடு தனுஷுக்கு ஜோடியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இந்தப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளாராம்.

செல்வராகவன் பேட்டி:

இதுகுறித்து பேட்டி ஒன்றி செல்வராகவன், நீங்கள் கூறுவது உண்மைதான் ‘நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் தான் நடிக்கிறார் என்றும் எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள். ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Dhanush: என்னோட படத்தில அந்த பொண்ணு மட்டும் வேண்டாம் – பிடிவாதமாய் மறுத்த தனுஷ்!

யாமினி விலகல்:

கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு முதலில் யாமினி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தனர். இவர் ஏற்கனவே செல்வராகவன் ஹீரோவாக நடித்த சாமி காகிதம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அந்த படத்தில் இவரின் ஒளிப்பதிவு அனைவராலும் பரட்ட பட்டதான் காரணமாக செல்வராகவன் இந்த ‘நானே வருவேன்’ படத்திற்கு யமினியை ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பமான ஒரு சில நாட்களில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் யாமினி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் தற்போது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் ஒளிப்பதிவாளராக யமினியை ஒப்பந்தம் செய்துள்ளார் அருண் மாதேஸ்வரன்.

இதை தெரிந்துகொண்ட தனுஷ் ஏற்கனவே நானே வருவேன் படத்தில் தனகும் யமினிகும் ஒத்துவராத காரணத்தால்தான் ஒளிப்பதிவாளரை மத்தினோம். இப்போ மறுபடியும் என்னோட படத்துல அவங்கள ஒப்பந்தம் செய்தால் என்ன அர்த்தம் என்று கோவம்கொண்டார் தனுஷ். அதன்பிறகு கேப்டன் மில்லர் படத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் யாமினி மீது தனுஷிற்கு எதற்கு இவளோ கோபம் என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version