Home Cinema News ‘அண்ணாத்த’ ஷூட்டிங் நிறுத்தம் – 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி.. ராஜினிகாந்துக்கு கரோனா நெகட்டிவ்

‘அண்ணாத்த’ ஷூட்டிங் நிறுத்தம் – 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி.. ராஜினிகாந்துக்கு கரோனா நெகட்டிவ்

1

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Pocket Cinema News

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 14-ம் தேதி ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. வழக்கமாகச் செய்யப்படும் கரோனா பரிசோதனையின் போது 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. ரஜினிக்குச் செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்பது தெரியவந்தது. ஆனால் சென்னைக்கு 2 நாட்களுக்குப் பிறகே திரும்ப முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

படப்பிடிப்பில் கரோனா தொற்று பரவல் செய்தி வைரலாக பரவி வருகிறது. கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்றுது. மேலும் எப்படி கரோனா தொற்று பரவியது என்று படக்குழுவினர் தீவிரமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

11.127122578.6568942

1 COMMENT

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version