Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Arya: ஆர்யா நடிப்பில் வரவிருக்கும் திரைப்படமான ‘காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் தனது அதிரடி அவதாரத்தின் மற்றொரு பரிமாணத்துடன் மீண்டும் வந்துள்ளார். இப்படத்தை முத்தையா இயக்குகிறார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சென்னையில் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. பாகனேரி கிராமத்தில் நடக்கும் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், ஆர்.கே.விஜய் முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் ஜூன் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்கிறார். ஆர்யா டைட்டில் ரோலில் நடிக்க, சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ட்ரைலர் எந்த கதையையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், பார்வையாளர்களை ஈர்க்க நிறைய மாஸ் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் இருந்தன.…
Pichaikkaran 2 : விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டர் என பல துறையில் ஒரு சிறந்த சாதனை படைத்தவர். இவரது சமீபத்திய படமான ‘பிச்சைக்காரன் 2’ நேற்று வெள்ளித்திரையில் அறிமுகமானது. தற்போது நம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான முக்கிய முடிவுகளில் விஜய் ஆண்டனிக்கு தொடர்பு இருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து வருகின்றனர். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் பிச்சைக்காரன். இப்படம் 2016ல் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பிச்சைக்காரன் படம் வெளியாகி சில மாதங்களில் ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. பணமதிப்பு நீக்கம் பற்றி ஒரு கதாபாத்திரம் பேசுவது போன்ற ஒரு காட்சி படத்தில் இருந்தது, அது அப்போது வைரலானது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகும் நாளான நேற்று ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து…
Thangalaan: மாளவிகா மோகனன் தமிழ் மற்றும் மலையாள படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் அவரது திருப்புமுனை கதாபாத்திரம் ‘தளபதி’ விஜய்யுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இப்படத்தில் நடிகர் ‘சீயான்’ விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை மாளவிகா மோகனன் ட்விட்டரில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்தார், தங்கலான் படப்பிடிப்பு எப்படி இருந்தது என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு நடிகை “தங்கலான் நன்றாக உருவாகிறது, இந்த மாதம் படத்தின் கடைசி ஷெட்யூல் ஒன்றை படமாக்க இருப்பதாக நடிகை மேலும் கூறினார், ஆனால் நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் குணமடைந்த பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார்கள். நடிகர் ‘சியான்’ விக்ரமுக்கு ஒத்திகையின் போது விலா எலும்பு முறிந்தது. தற்போது, அவர் குணமடைந்த பிறகே படப்பிடிப்பு…
Official: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டின் முதல் பெரிய படம், மாவீரன், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது, மேலும் இப்படத்தின் மீது அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது. அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் பேனரின் கீழ் மண்டேலா புகழ் பெற்ற மடோன் அஷ்வின் இயக்க, தெலுங்கிலும் மகாவீருடு என்ற பெயரில் வெளிவரவுள்ள இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என்ற ஆசிய சினிமாஸ் மூலம் விநியோகிக்கப்படும் என இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான சாந்தி டக்கீஸ் தெலுங்கு பதிப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் அறிவிப்பு தேதியை வெளியிட்டுள்ளது. “ஜூலை 14 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் உள்ள திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் மகாவீருடு (மாவீரன்) படத்தை உங்களுக்குக் கொண்டு வருவதில் @AsianCinemas_ உடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!” டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மாவீரன் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது, ஆனால் ஆகஸ்ட்டுக்கு முன்னதாகவே ஜூலை மாதத்தில்…
Maamanan: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த இசையமைப்பை யுகபாரதியின் வரிகளுடன் வைகை புயல் வடிவேலு பாடியுள்ளார். ‘இராச கண்ணு’ ஒரு குலத்தின் அவலத்தைப் பற்றிய துக்கப் பாடலாக ஒலிக்கிறது. வடிவேலுவின் குரலிற்கு ஏற்ப்ப இசையை பயன்படுத்தி பாடலை அழகாக உருவாக்கியுள்ளார் ஏ.ஆர் ரகுமான். இந்த லிரிக்கள் வீடியோவில் பாடல் பதிவின் கிளிப்புகள் மற்றும் சில மாண்டேஜ்கள் உள்ளன. உதயநிதி ஸ்டாலின் நடனமாடும் சில காட்சிகளுடன் வீடியோ முடிகிறது. முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன், அவரது நடிப்பு வாழ்க்கையில் இதுவே கடைசி படம் என்று கூறப்படுகிறது. சாண்டி மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் ஜூன் மாதம், பக்ரீத் பண்டிகை அன்று திரைக்கு வர உள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே…
Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் ‘லியோ’ படத்தில் விஜய்யின் அப்பாவாக மூத்த சூப்பர் ஸ்டார் ஒருவர் நடிக்கிறார் என்ற சூடான செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி சமுக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதன் கிளைமாக்ஸ் காட்சியை அடுத்த மாதம் ஹைதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் அவர் படத்தில் முக்கிய வில்லனாக இருப்பார் என்று பல யூகங்கள் இருந்தன. தற்போது அவர் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், படத்தில் விஜய்யின் அப்பாவாக சஞ்சய் தத் நடிக்கிறார் என்றும், திரைக்கதையில் அவர்கள் இருவரும் கேங்ஸ்டர்கள் என்றும் பாலிவுட் ஊடகம் ஒன்றில் அப்டேட் வந்துள்ளது. எனினும் இத்தகவல் பற்றின…
Aishwarya Rajesh: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பார். அந்த வகையில் காக்கா முட்டை படத்தில் இரண்டு குந்தைக்கு அம்மாவாகவும், கிராமத்து பெண், பேய் கதாபாத்திரம் போன்ற பல கதாபாத்திரத்தை சுலபமாக தேர்வு செய்து நடிப்பவர். தற்போது அவர் ஃபர்ஹானா திரைபடத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது, தெலுங்கில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, புஷ்பாவில் ஸ்ரீவள்ளி போன்ற வேடங்களில் நான் நடிப்பேன் என்று ஐஸ்வர்யா பதிலளித்தார். இந்த அறிக்கையை ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டு, ஐஸ்வர்யா, ராஷ்மிகா மந்தனாவை விமர்சித்ததாக எழுதப்பட்டது. எனவே ஐஸ்வர்யா ராஜேஷ் இதை பற்றி ஒரு அறிக்கையை அளித்து, தான் ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டியுள்ளதாகவும், ராஷ்மிகா மந்தனாவை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும் தெளிவுப்படுத்தினார். அதேபோல் ஐஸ்வர்யாவின் அர்த்தம் எனக்குப் புரிந்தது என்றும், நடிகை ஐஸ்வர்யா மீது தனக்கு பெரிய…
Rajinikanth: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த் லால் சலாம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது புதிய படத்தில் நடிக்கிறார். ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கும் இப்படத்தில் திறமையான நடிகர்களான விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது ரஜினிகாந்த் தனது சமுக வலைத்தளத்தில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது. ரஜினிகாந்த், கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உடனான புகைப்படத்தை வெளியிட்டு, “இந்தியாவை முதல்முறையாக வென்று கிரிக்கெட் உலகக் கோப்பையை பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் பணிபுரிவது எனது மரியாதை மற்றும் பாக்கியம்!!!”. என்று அவர் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம், லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் மேக்கப் மற்றும் தோற்றத்தைக் காட்டுகிறது. இந்த…
kamal Hassan: உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவருகிறார். பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனிருத், ஃபஹத் பாசில் மற்றும் சூர்யா போன்ற தற்போதைய தலைமுறையின் நட்சத்திரங்களுடன் இணைந்து கமல்ஹாசன் தனது மறுபிரவேசம் திரைப்படமான ‘விக்ரம்’ திரைப்படத்தில் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வணிக வெற்றியை ருசித்தார். உலகநாயகன் தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 21’, சிம்புவின் ‘எஸ்டிஆர் 48’, பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவனின் புதிய படம், எச்.வினோத் மற்றும் சூர்யாவுடன் ‘கேஎச் 233’ போன்ற பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனுஷை வைத்து கமல் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக கோலிவுட்டில் பலத்த சலசலப்பு நிலவுகிறது. தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் நெல்சன் திலீப்குமாரின் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள்…
Kollywood: மணிரத்னத்தின் இரண்டு மெகா பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்களில் அருண்மொழி வர்மனாக ரசிகர்களை கவந்தார் ஜெயம் ரவி. அவரது நடிப்பில் தற்போது ‘ஜேஆர் 33’ படத்திற்காக நித்யா மேனனுடன் ஜோடி சேரவுள்ளார். இப்படத்தை பிரபல பெண் இயக்குனர் இயக்க போவதாக தகவல் தெரிவிகின்றனர். ஜெயம் ரவியின் ‘JR 33’ படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பதோடு, அமைச்சர் உதயநிதியின் மனைவயுமான கிருத்திகா உதயநிதி இயக்குகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றனர். இப்படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், இது ‘பி.எஸ் 1’ ‘பி.எஸ் 2’ மற்றும் வெல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வரவிருக்கும் ‘ஜெனி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் நான்காவது கூட்டுப்பணியாகும். மேலும் கிருத்திகா உதயநிதி தனது ஹோம் பேனரான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்காக இயக்கும் இரண்டாவது படம் இது. கீர்த்தி சுரேஷுடன் ‘சைரன்’, நயன்தாராவுடன்…

