Home Cinema News Kollywood: சூர்யா 42 டைட்டில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Kollywood: சூர்யா 42 டைட்டில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

0

Kollywood: சூர்யா 42 திரைப்படம் கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும். சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் சூர்யாவின் கேரியரில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் ஒரு வலிமைமிக்க வீரனைப் பற்றியது, தற்போது இதன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read: சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் சென்சார் மற்றும் ரன் டைம் வெளியாகியுள்ளது

தற்போது ஹாட் செய்தி என்னவென்றால், இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 09.05 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக புதிய போஸ்டருடன் இணையத்தில் அறிவித்தார்கள். இந்த போஸ்டரில் சூர்யா இடி மற்றும் மின்னல் மத்தியில் குதிரையில் சவாரி செய்வதைக் காணலாம். இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த காலகட்ட அதிரடி படத்தில் பாலிவுட் ஹாட் திஷா பதானி முன்னணி நாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் ஆகியோருடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படம் 10 மொழிகளிலும் 3D பதிப்பிலும் வெளியாகவுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version