Home Cinema News Official Kantara: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட காந்தாரா திரைப்படம்

Official Kantara: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட காந்தாரா திரைப்படம்

0

Kantara: கன்னட படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை ஈட்டி திரையுலகினரையும், ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது காந்தாரா படம். கன்னடத்தில் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 8 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட காந்தாரா 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது கர்நாடகாவில் வாழும் பழங்குடியின மக்களின் மத வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட கதை. படத்தில் மாடு துரத்தும் காட்சியும், தெய்வக்கோலை என்ற சாமியாட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Official Kantara: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட காந்தாரா திரைப்படம்

தற்போதைய செய்தி என்னவென்றால் காந்தாராவை 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படம் விருது பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் அனுப்பினாலும், தங்கள் படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் என இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘காந்தாரா’ 2 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று பதிவு செய்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version