Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Kamal Hassan: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாஸன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.கமல்ஹாஸன் கதர் ஆடை தொடர்பான நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று திரும்பிய பின் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் சென்னையிலுள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் கமல் தொகுத்து வழங்கிவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணா தொகுத்து வழங்கினார்.முதல்வர் ஸ்டாலின்r, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்கள்.தற்போது நோய்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் கமல்.மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: “கொரோனா நோய் தொற்றிலிறுந்து நடிகர் கமல்ஹாஸன் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வழக்கமான அவரது பணிகளை தொடரலாம் என்று தெரிவித்தனர்.நன்றி தெரிவித்த கமல்: மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன்.தன் சொந்த சகோதரன் போல்…
Shabaash Mithu: இந்திய மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் கேப்டனான புகழ்பெற்ற கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது ஒரு உற்சாகத்தை பார்க்க முடியும். பாக் மில்கா பாக் மற்றும் மேரி கோம் போன்ற தேசிய விருது பெற்ற விளையாட்டு வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் பின்னணியில் உள்ள ஸ்டுடியோ Viacom18 Studios. மிதாலியின் பிறந்தநாளை முன்னிட்டு Viacom18 Studios இன்று சபாஷ் மிதுவின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மிதாலியின் வாழ்க்கையின் மகிழ்ச்சி தருணங்களை மற்றும் உயர்வு, தாழ்வுகள், மற்றும் பின்னடைவுகளை படம் விவரிக்கிறது, இப்படத்தில் விஜய் ராஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். Viacom18 Studios தயாரித்த, ஷபாஷ் மிது படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். சபாஷ் மிது, மிதாலியின் உலக அரங்கில் அவரது எழுச்சியையும் பொருத்தமாக கொண்டு வருவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களில் படமாக்கப்பட்டது. டாப்ஸி பண்ணு நடித்த சபாஷ் மிது படம் 2022 பிப்ரவரி…
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகிய படம் பேச்சுலர். திவ்யபாரதி, முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.இந்நிலையில் பேச்சுலர் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், பேச்சுலர் குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது. ட்விட்டர் கருத்து.*பேச்சுலர் படம் அருமை. அண்ணா வேற லெவல் லுக் மற்றும் ஆட்டியூட் செம. ஜிவி பிரகாஷ் வசனம் பேசும் விதம் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தம்.*முதல் பாதி முடிந்துவிட்டது. இது வரை மிக அருமை. ஜிவி பிரகாஷ்ணாவின் நடிப்பு தீயாக இருக்கிறது. இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன்.*முதல் பாதி மாஸ். ஜிவி பிரகாஷ் அண்ணா நடிப்பு வேற லெவல்.*வேற லெவல் படம். என் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. ஜிவி பிரகாஷ்ணா கெரியர் பெஸ்ட் நடிப்பு*பேச்சுலர் கண்டிப்பாக ஹிட் தான். புது அனுபவமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.*ஜி.வி. பிரகாஷ் என்ன ஒரு நடிப்பு. கோலிவுட்டின் விஜய் தேவரகொண்டா அவர் என தெரிவித்துள்ளனர்.
kadaisi Vivasayi: விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிய நிலையில் அந்த படத்தின் பட குழுவினர் மீது தற்போது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வர காத்திருக்கும் படம் கடைசி விவசாயி, காகா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கியுள்ளர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடைசி விவசாயி படத்தில் முதலில் இளையராஜா இசையமைத்திருந்தார். அவர் பின்னணி இசையில் கடந்த ஆண்டு கடைசி விவசாயி படத்தின் முதல் டிரெய்லர் வெளியானது. பின்னர் இயக்குனருக்கும் இளையராஜாவிற்கு ஏதோ ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாக கடைசி விவசாயி படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் இரண்டாவது டிரெய்லர் வெளியானது.இதை தெரிந்து கொண்ட இளையராஜா தன் அனுமதி இல்லாமலும், தன்னை கேட்காமலும் இசையமைப்பாளரை மற்றியதாக ‘கடைசி விவசாயி’ படத்தின் மீது இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்தில் புகார்…
Chiyaan 61-விக்ரமின் புதிய படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார்.விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’, அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் ‘மகான்’. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘மகான்’ திரைபடம் ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக உருவாகி வருகிறது. முதன்முறையாக தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.தற்பொழுது விக்ரமின் ‘சியான் 61’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரமின் அடுத்த படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் குமார் ஊடக துறைக்கும் தனது ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த படத்தை போனி கப்போர் தயாரிக்கிறார்.தற்போது அஜித் அவரது ரசிகர்களுக்கும் ஊடக துறைக்கும் வேண்டுகோள் விடுத்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்றும் தன்னை அஜித் அல்லது ஏ.கே என்று அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜனம் மற்றும் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ, என் இயற் பெயரான அஜித் குமார், அஜித் என்றோ அல்லது ஏ. கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு எதாவது…
அஜித் குமார் நடித்திருக்கும், ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படம் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களுக்கு வர இருக்கின்றன. செகண்ட் சிங்கிள் டிசம்பர் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.இந்நிலையில் தான் இன்று மாலை 7 மணிக்கு வலிமை படத்தில் வரும் இரண்டாவது பாடல் ப்ரொமோ வெளியாகும் என்றார்கள். அதன்படி ப்ரொமோ வெளியாகியிருக்கிறது. நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ என்று அஜித் பேசுவதுடன் ப்ரொமோ துவங்கியிருக்கிறது.இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். அந்த பாடலை டிசம்பர் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.வேற மாறி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி பெரிய அளவில் ரீச்சானது.அஜித் உலகம் முழுக்க தன் பைக்கில் செல்ல வேண்டும் என்பதே அஜித்தின் ஆசை ஆகும். தற்பொழுது வலிமை பட வேலை முடிந்த பிறகு தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஊர் சுற்றி வருகிறார் இந்நிலையில்…
அனுஷ்கா ஷெட்டி தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து தொடர்ந்து நடித்து வருபவர் இவர். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான் அனுஷ்காவின் கடைசி வெற்றி படமாகும். இந்நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் அனுஷ்கா ஷெட்டி ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். மீண்டும் AL விஜய் இயக்கத்தில் கமெர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷெட்டி AL விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர். நீண்ட இடைவெளிக்கு, ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக பொறுத்திருந்து பார்ப்போம்.
கமல்ஹாஸன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விக்ரம் படத்தில் பெரும் மாற்றம்.நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாஸன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கிறார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட நிலையில் விக்ரம் படத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது படகுழு. இது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாஸன் தொடர்ந்து இரும்பில் இருந்ததன் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என்று வந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள ராமசந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டும் அல்லது இவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் கமல் சார்பாக தொகுத்து வழங்கினார்.அப்போது மருத்துவமனையில் இருந்தவாறு கமல் லைவில் பேசினார்.அனைவரும் இந்த கொரோனா காலத்தில் பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக அறிவுறுத்தினார். விஜய்சேதுபதி மாஸ்டர் படத்தில் விஜய்க்கு விலனாக நடித்தது…
நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் தற்போது காலமாகியிருப்பது திரையுலமே சோகத்தில் மூழ்கியது.தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். அப்போது முதல் தற்போது வரை முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுளளார். ‘திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட பலபடங்களில்ப ணியாற்றியுள்ளா்.அதோடு மகதீரா படத்தில் ஒரு படலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கபட்டது. தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம், கண்ணா லாட்டுதின்ன ஆசையா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.கடந்த சில தினங்களாக சிவசங்கர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.அவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

