Home GOSSIP Vijay: ஜேசன் சஞ்சய் ரசிகர்களிடம் வைத்த கோரிக்கை – ஃபேக் அக்கவுண்டில் ஆள்மாறாட்டம்

Vijay: ஜேசன் சஞ்சய் ரசிகர்களிடம் வைத்த கோரிக்கை – ஃபேக் அக்கவுண்டில் ஆள்மாறாட்டம்

0

Vijay: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக தளபதி விஜய் ரசிகர்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஹி இஸ் பேக் – கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஃபயர் அப்டேட் வந்துவிட்டது

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் ஒரு பெரிய சண்டைக்காட்சியை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாங்கள் முன்பு தெரிவித்தது போல், பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், பல்வேறு படப்பிடிப்புத் தளங்களில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

Vijay: ஜேசன் சஞ்சய் ரசிகர்களிடம் வைத்த கோரிக்கை - ஃபேக் அக்கவுண்டில் ஆள்மாறாட்டம்

ஞாயிற்றுக்கிழமை ‘வாரிசு’ படத்தின் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிக் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதற்கிடையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படத்தில் இருந்து கசிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக ஒரு முக்கிய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

Also Read: . சினிமாவுக்கு வெளியே சூர்யாவின் புதிய பிசினஸ்?

இருப்பினும், சஞ்சய்க்கு ட்விட்டர் அல்லது வேறு எந்த சமூக ஊடக கணக்கும் இல்லை என்றும், யாரோ அவரை போலி கணக்கு மூலம் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள் என்றும் விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஜேசன் சஞ்சய் கனடாவில் படித்துவருகிறார் மேலும் குறும்படங்களை எழுதி இயக்கி நடித்துள்ளார். அவர் விரைவில் தனது அப்பா போல் கோலிவுட்டில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version