Home Entertainment New Movie Release: பொங்கல் படங்கள் முதல் காட்சி ரத்து: காரணம் இதுதான்?

New Movie Release: பொங்கல் படங்கள் முதல் காட்சி ரத்து: காரணம் இதுதான்?

0

New Movie Release: பொங்கல் படங்கள் திரையிட்ட பல திரையரகங்களில் ரசிகர்கள் வரவில்லையாம். யாரும் வராத காரணத்தால் முதல் காட்சியே ரத்து செய்யப்பட்டது.

New Movie Release: பொங்கல் படங்கள் முதல் காட்சி ரத்து: காரணம் இதுதான்?

இந்த ஆண்டு (2022) பொங்கல் திரைப்படங்கள் சசிகுமாரின் கொம்புவெச்ச சிங்கம்டா, சதிஷ் நடிப்பில் நாய் சேகர், பிரபுதேவாவின் தேள், அஸ்வின் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் போன்ற பல படங்கள் இந்த பொங்கலுக்கு வெளியானது.

கொரோனா வைரஸ் அதிகரிப்பு ஒருபுறம் ரசிகர்கள் எதிர்பார்த்த படங்கள் அனைத்தும் பின்வாங்கியதால். பொதுமக்கள் யாரும் வராததால் காட்சிகள் ரத்து செய்யபட்டது. பொங்கல் படங்கள் திரையிட்ட பல திரையரகங்களில் ரசிகர்கள் வரவில்லையாம். யாரும் வராத காரணத்தால் முதல் காட்சியே ரத்து செய்யும் நிலைக்கு திரையரங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகளினால் அஜித் நடிப்பில் வலிமை, ராதே ஷ்யாம், RRR ஆகிய படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிவைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த திரைப்படம் வெளியே வராத காரணத்தால் அவர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால். படம் பார்க்கும் ரசிகர்கள் கொரோனா அச்சத்தினால் திரைக்கு வரவில்லையாம். இந்த நேரத்தில் வலிமை, ராதே ஷ்யாம், மற்றும் RRR திரைப்படங்கள் வெளியாகி இருந்தால் அந்த படங்கள் கதி என்ன என்ற கேள்வி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாகத்தான் பல திரையரங்கங்களில் கூட்டம் இல்லமால் வெறிச்சோடி காணப்படுகிறது என்பது தற்போது அனைவரின் பொதுவான கருத்து.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version