Home Entertainment Nayanthara: திருமணமான பெண்களுக்கு நயன்தாராவின் வலுவான கருத்து

Nayanthara: திருமணமான பெண்களுக்கு நயன்தாராவின் வலுவான கருத்து

0

Nayanthara: நயன்தாரா தனது நீண்டகால கதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிகள் திருமணமாகி நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் பெற்றோர்களானார்கள். புதிய அம்மாவான நயன்தாரா சமீபத்தில் தனது புதிய திரைப்படடதிற்கான விளம்பர நிகழ்ச்சியில் தோன்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தான் தாய்யானது பற்றியும், பெண்கள் திருமணத்திற்குப் பிறகு வேலை செய்யக்கூடாது என்று நினைக்கும் நபர்களுக்கு அவர் மனம் திறந்தார். தொகுப்பாளனி திவ்யதர்ஷினி ( டி.டி.) உடன் பேசிய நயன்தாரா, “பெண்களுக்கு ஏன் கட்டுப்பாடுகள் உள்ளன.

Also Read: கனெக்ட் படத்தின் ட்விட்டர் லைவ் விமர்சனம்

திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு வேலைக்கு செல்லாத காரணம் ஏன்? ஆண்கள் திருமணமான அடுத்த நாளே அலுவலகத்திற்கு செல்கிறார்கள். திருமணம் ஒரு இடைவெளி புள்ளி அல்ல. இதுவரை சந்தித்த எல்லா பெண்களிலும் அந்த மனநிலையை நான் பார்த்தேன். ஆனால் எனக்கு எதுவும் மாறவில்லை. இது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தின் அழகான ஆரம்பம். எனது ஆதரவு அமைப்பினால் மட்டுமே எனது வாழ்க்கை சிறப்பாக உள்ளது. என்னால் அதிகம் சாதிக்க முடியும், திரைப்படங்களை நன்றாகப் புரிந்துகொண்டு மேலும் பலவற்றைச் செய்ய முடியும். திருமணம் அழகானது, உங்களால் ஏன் கொண்டாட முடியவில்லை?” என்று அவர் மேலும் கூறினார்.

Nayanthara: திருமணமான பெண்களுக்கு நயன்தாராவின் வலுவான கருத்து

நயன்தாரா கடைசியாக காத்துவாகுல ரெண்டு காதல், O2, காட்பாதர், கோல்ட் ஆகிய படங்களில் நடித்தார். அவர் ஷருகணுடன் நடித்துள்ள ஜாவான் திரைப்படம் 2023 இல் திறைகானவுள்ளது. அதோடு அவர் நடித்த கனெக்ட் திரைபடம் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version