Home Cinema News Kollywood: ‘நயன்தாரா-75’ படத்தின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்கப்பட்டது

Kollywood: ‘நயன்தாரா-75’ படத்தின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்கப்பட்டது

0

Nayanthara: தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்பது நாம் அறிந்ததே. நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் காத்திருந்து படங்களைத் தொடங்கும் நிலை உள்ளார் நயன்தாரா. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ என்ற படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘இறைவன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

Kollywood: 'நயன்தாரா-75' படத்தின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்கப்பட்டது

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தயாராகும் நயன்தாரா 75 படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார், மேலும், கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, பூர்ணிமா ரவி, ரேணுகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜீ ஸ்டுடியோஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போதைய செய்தி என்னவென்றால், நயன்தாரா-75 படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்று, மேலும் இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் பூஜையில் பிரபலங்கள் மற்றும் முக்கிய படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version