Home Cinema News Samantha: நடிப்பிற்கு ப்ரேக் போட்ட சமந்தா – அட்வான்ஸ் தொகையை திருப்பிதர காரணம் என்ன?

Samantha: நடிப்பிற்கு ப்ரேக் போட்ட சமந்தா – அட்வான்ஸ் தொகையை திருப்பிதர காரணம் என்ன?

0

Samantha: தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் “குஷி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், அவர் “சிட்டாடல்” என்ற வலைத் தொடரையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

குஷி மற்றும் சிட்டாடலுக்குப் பிறகு அவர் தனது கடமைகளில் இருந்து விடுபடுவார் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​சமந்தா வேலையில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் அவர் ஒப்பந்தம் செய்ய மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமந்தா படத்தில் நடிப்பதாக வாங்கின அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

Samantha: நடிப்பிற்கு ப்ரேக் போட்ட சமந்தா - அட்வான்ஸ் தொகையை திருப்பிதர காரணம் என்ன?

மியோசிடிஸ்னால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் சிகிச்சைப் பெற்று சிறிது காலம் ஓய்வு பெற்று வந்த சமந்தா பினர் படிப்படியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சமந்தா, தற்போது படத்தில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகுவதாக கூறப்படுகிறது. தனது உடல்நிலையை மீட்டெடுக்கவும் கூடுதல் சிகிச்சை பெறவும் இந்த நேரத்தை பயன்படுத்துவார் என்று தெரிவிக்கின்றனர். இதனால் வாங்கிய முன் பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version