Home Cinema News Lokesh Kanagaraj: சூரியாவுடன் இணையும் படத்தை பற்றி மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj: சூரியாவுடன் இணையும் படத்தை பற்றி மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

0

Lokesh Kanagaraj: தமிழ் நடிகர்களில் சூரியா மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். அவர் தற்போது சிறுத்தை சிவாவின் மெகா பட்ஜெட் ஃபேண்டஸி படமான ‘சூர்யா 42’ என்ற பிரம்மாண்டமான படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கராவுடன் இணையயுள்ளர்.

Also Read: இந்தி சினிமா குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ஒரு சுருக்கமான கேமியோ தோற்றத்தில் சூரியா நடித்தர். அதில் அவர் போதை மருந்து மாஃபியாவின் கிங் ரோலக்ஸாக நடித்தார், மேலும் அந்த பாத்திரம் சில நிமிடதிரை நேரத்துடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சூரியாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் மில்லியன் கணக்கானவர்களை கொண்டாட வைத்தது.

Lokesh Kanagaraj: சூரியாவுடன் இணையும் படத்தை பற்றி மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். விழாவில் பேசும்போது, ஒரு முழு திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைவதை உறுதிப்படுத்தினார். “விக்ரம் படத்தில் நான் சூர்யா சாருடன் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை செய்தேன். கண்டிப்பாக 150 நாட்கள் படப்பிடிப்பு கொண்ட ஒரு முழு படத்தை செய்வேன், அது விரைவில் நடக்கும்” என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்திற்குப் பிறகு சூர்யாவுடன் சூப்பர் ஹீரோ படமான ‘இரும்பு கை மாயாவி’ படத்திற்காக பணியாற்றவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் அந்த படம் பின்னர் தொடங்கவில்லை. இப்போது, இருவரும் பிரம்மாண்டமான ஒரு படத்தில் இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது ரோலக்ஸா அல்லது இரும்பு கை மாயாவியின் படமா என்பதை லோகேஷ் தெளிவுபடுத்தவில்லை.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version