Home Entertainment Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

25
0

Nayanthara: நயன்தாரா சென்சேஷன்ஸ் பிராண்ட் அம்பாசிடர். தற்போது இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இவர் தனது 75வது படத்திற்கு ரூ.10 கோடி கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா இதுவரை 6 கோடி சம்பளம் வாங்கி வந்தார், தற்போது திருமணத்திற்கு பிறகு அதை 10 கோடியாக உயர்த்துவது விவாதப் பொருளாகியுள்ளது. நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் நுழைந்தார். அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுடன் நடிக்கும் படம் நயன்தாராவின் பாலிவுட்ட எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

Also Read: Ponniyin Selvan-1: மணிரத்னம்-சியான் விக்ரம் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ்

ALSO READ  Trisha: 19 வருடங்கள் நிறைவு செய்தேன் - கேக் வெட்டி கொண்டாடும் திரிஷா

கோலிவுட்டுக்கு ஐயா படத்தில் நாயகியாக இறக்குமதியான இந்த அழகி தனது முதல் படத்திலேயே வெற்றியை பார்த்தார். மேலும் கஜினியும் சந்திரமுகியும் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களாகவும் வெற்றிப் படங்களாகவும் அமைந்ததால், திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. நிஜ வாழ்வில் சில தோல்விகளை சந்தித்தாலும், அந்த பாதிப்பு திரையுலகில் அவரைப் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் - எத்தனை கோடி தெரியுமா?

Also Read: Suriya: சூர்யா முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம்

ALSO READ  Vijay selfie video: இணையத்தில் வைரலாகும் தளபதி விஜய்யின் செல்ஃபி வீடியோ

குறிப்பாக காதல் விவகாரத்தில் தோல்விகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு மறுபுறம் கேரியரில் வளர்ந்து டாப் ஹீரோயின் லெவலுக்கு வந்தவர். பிறகு லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடம் கிடைத்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் நயன்தாரா தான். இந்நிலயில் திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவின் திரையுலக வாழ்க்கை வீழ்ச்சியடையும் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களின் கருத்துகளை நூறுக்கி தனது கேரியரில் மேலும் மேலும் வளர்ந்து வருகிறார் லேடி சூப்பர் நயன்தாரா.

Leave a Reply