Home Entertainment A. R. Rahman: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பின் அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்

A. R. Rahman: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பின் அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்

38
0

A.R. Rahman: இயக்குனர் மணிரத்னத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்டப் படமான பொன்னியின் செல்வன் திரைபடம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியாகிறது. டீஸர் முதல் விளம்பரப் படங்கள் வரை பிரமாண்டத்துக்குக் குறைவில்லாமல் இருக்கிறது. சோழர் காலத்து கம்பீரமான செட் மற்றும் உடைகள் சமமாக கவனத்தை ஈர்க்கின்றன. பொன்னியின் செல்வன் படத்திற்க்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

A. R. Rahman: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பின் அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்

உலகளவில் புரொமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று ஹைதராபாதில் படத்தின் புரோமோன் நிகழ்ச்சியை நடத்திய படக்குழு இன்று புரொமோஷன்காக மும்பை சென்றுள்ளனர். புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இசை புயல் ஏ.ஆர் ரகுமான் பொன்னியின் செல்வம் படத்தை பார்த்தபின் ஓடிடியில் பிரமாண்டமான ஹாலிவுட் படங்களை பார்க்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார். நமது ஊரில் இவ்வளவு அற்புதமான கதைகள், திறமையான கதைகள் இருக்கும்போது எதற்காக வெளிநாட்டு படங்களை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  Kollywood: அட்லீ தனது மகனை முதன்முறையாக உலகுக்கு காட்டுகிறார்

Also Read: நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணத்தின் அதிகாரப்பூர்வ டீசர்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிதவர்களுக்கும் இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார் ஏ.ஆர் ரகுமான். இப்படத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி என்று பல பிரபலங்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்க்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைதுள்ளார்.

Leave a Reply