Home Cinema News Mass combo: விஜய் மற்றும் அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு நடிக்கிறாரா?

Mass combo: விஜய் மற்றும் அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு நடிக்கிறாரா?

8
0

Simbu: வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை பிறகு சிம்பு அவரது சிறந்த நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிம்பு, கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் படம் ‘பத்து தலை’ இப்படத்தை ஓபெலின் என் கிருஷ்ணா இயக்குகிறார். கூடிய விரைவில் இப்படம் திரைகானவுள்ளது. மேலும் ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளார், அதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ALSO READ  Amaran: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' திரைப்படம் பண்டிகை நேரத்தில் வெளியீட்டிற்கு தயாராகிறது

Mass combo: விஜய் மற்றும் அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு நடிக்கிறாரா?

இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுவது டாப் கமர்ஷியல் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவிடம் ஒரு கதைக்களத்தை விவரித்தார், மேலும் அதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரை சமீபத்தில் சந்தித்தார். மாஸ் ஹீரோ திரைக்கதையை விரும்பி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதையை விஜய் மற்றும் அஜித் இருவரிடமும் கூறப்பட்டதாகவும் ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிம்புவின் இமேஜுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ  Indian 2: இந்தியன் 2 படப்பிடிபிற்காக தாய்வான் சென்ற ஷங்கர் - வெளியான வைரல் புகைப்படம்

Also Read: சிம்புவின் அடுத்த படத்தின் ரிலீஸ் பற்றிய ஹாட் அப்டேட் – இணையத்தில் வைரல்

சிம்புவுக்காக ஏ. ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள முற்றிலும் புதிய ஸ்கிரிப்ட் என்று மற்ற வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 2023 இன் இரண்டாம் பாதியில் தொடங்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் இதை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்போம்.

Leave a Reply