Home Cinema News Ragava Lawrence: ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யாவின் ஜிகிரிதண்டா டபுள் எக்ஸ் படபிடிப்பு...

Ragava Lawrence: ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யாவின் ஜிகிரிதண்டா டபுள் எக்ஸ் படபிடிப்பு நிறைவை கொண்டாடிய படக்குழு

34
0

Ragava Lawrence: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். மகிழ்ச்சியான முடிவை, கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். தீபாவளி பண்டிகையின் போது படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் சண்டையிடும் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் கடினமானவராகவும் அதே சமயம் எஸ்.ஜே.சூர்யா ஒரு தந்திரமான கேங்ஸ்டராக நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூரியாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு கடந்த புதன்கிழமை சென்னையில் நிறைவடைந்தது. இத்திரைப்படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரிய பல பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டது.

ALSO READ  Bollywood: ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் ஜவான் 2

Ragava Lawrence: ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யாவின் ஜிகிரிதண்டா டபுள் எக்ஸ் படபிடிப்பு நிறைவை கொண்டாடிய படக்குழு

 

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையயில் எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸிற்காக கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தயாரிக்கின்றனர். ஜிகர்தண்டா (2014) படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூரியா ஆகியோர் நடித்துள்ளனர். ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த துணை நடிகர் பாபி சிம்ஹா மற்றும் சிறந்த எடிட்டிங் விவேக் ஹர்ஷன் தேசிய விருதுகளை வென்றார். இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply