Home Cinema News Kollywood: சூர்யாவுடன் எனது படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தை பற்றியது – சுதா கொங்கரா

Kollywood: சூர்யாவுடன் எனது படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தை பற்றியது – சுதா கொங்கரா

214
0

Kollywood: இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவுக்கு சூரரைப் போற்று என்ற ஒரு அற்புதமான படத்தை வழங்கினார். இந்த வரலாற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் சூர்யா தேசிய விருதுகளைப் பெற்றனர், மேலும் இருவரும் புறநானூறு என்ற திரைப்படத்திற்காக மீண்டும் இணைகின்றனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் சுதா கொங்கரா, சூர்யாவுடன் தனது இரண்டாவது படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.

ALSO READ  Kollywood: நடிகர் சங்க கட்டிடத்திற்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சுதா கொங்கரா கூறுகையில் “இது ஒரு அமைப்புக்கு எதிரான கதை, இது எனக்குப் ரொம்ப பிடிக்கும். புறநானூறு 1960 களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒடுக்குமுறைக்கு எதிரான படம். என்னுடைய எல்லா படங்களும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடியதாக நான் நினைக்கிறேன்.

ALSO READ  Mark Antony Big update: விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்

Kollywood: சூர்யாவுடன் எனது படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தை பற்றியது - சுதா கொங்கரா

சுதா கொங்கரா மேலும் கூறுகையில் “ இந்த பெண் குத்துச்சண்டை வீராங்கள் தடைகளை உடைத்து வெற்றி பெறுகிறார் (அவரது படத்தை குறிப்பிடுகிறார்). பெரும்பாலான பெண்கள் பல ஆண்டுகளாக ஆணாதிக்கத்தை எதிர்கொள்கிறார்கள், அதை ஒடிக்க வேண்டும். எல்லாவிதமான பிரிவினையும், ஒடுக்குமுறையும், பிரிவினையும் உள்ளது. அதைப் பற்றி கவலைப்படுவதை விட நீங்கள் அதை ஒடிக்க வேண்டும். ”

Leave a Reply