Home Cinema News Kollywood: இரண்டு ஜாம்பவான்கள் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க விரும்பினேன் என்ற தனுஷ்

Kollywood: இரண்டு ஜாம்பவான்கள் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க விரும்பினேன் என்ற தனுஷ்

16
0

Kollywood: தனுஷ் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இப்போது இசை மேஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ‘இளையராஜா’வாக நடிக்க உள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படம் இன்று லீலா பேலஸில் இளையராஜா மற்றும் கமல்ஹாசனால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Kollywood: இரண்டு ஜாம்பவான்கள் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க விரும்பினேன் என்ற தனுஷ்

இந்த நிகழ்வில் பேசும் போது தனுஷ் தனது இரண்டு ஜாம்பவான் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை ஒன்று இளையராஜா சார் மற்றொருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார், இருவரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் மட்டுமே நான் நடிக்க விரும்பினேன் என்று தெரிவித்தார். அதில் ஒன்று இப்போது நடக்கிறது, நான் இளையராஜாவின் ரசிகன் மற்றும் பக்தன் என்று மேலும் கூறினார்.

நடிக்கத் தெரியாத காலத்திலிருந்து இப்போது வரை ஒரு காட்சியை எடுக்க வேண்டும் என்றால் அந்தக் காட்சிக்கு ஏற்ற பாடல் அல்லது பின்னணி இசையைக் கேட்பேன். அந்த காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று இசை சொல்லும், அதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அந்த காட்சியில் நடிப்பேன். இதை வெற்றிமாறனும் ஒருமுறை பார்த்திருக்கிறார். இளையராஜா சார் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது எனக்கு சவாலானது என்று பலர் கூறுகின்றனர், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை ஏனென்றால் அவரைப் போல் எப்படி நடிக்க வேண்டும் என்று அவருடைய இசை எனக்குச் சொல்லும் என்றார் தனுஷ்.

Leave a Reply