Home Cinema News முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறார்கள்

முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறார்கள்

38
0

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். 

Pocket Cinema News

ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ரஜினி தொடர்பான 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பிரசாணையல் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பை கடந்த அக்டோபர் மாதம் துவங்க திட்டமிட்டார்கள். ஆனால் ரஜினிகாந்த் தற்போதைக்கு வர முடியாது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

ALSO READ  Leo 5th Day Collection: லியோ உலகம் முழுவதும் ஐந்தாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Also Read: அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2

பின்னர் ரஜினிகாந்த் தன் முடிவை மாற்றிக் கொண்டு அக்டோபர் மாதமே படப்பிடிப்புக்கு வருவதாக கூறினார். ஆனால் கொரோனா நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதும் பாதுகாப்பு இல்லை என்று மீண்டும் மனம் மாறினார். படப்பிடிப்பை மீண்டும் துவங்கும் திட்டத்தை கைவிட்டனர்.

Also Read: கட்சி தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் என மூன்று முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது – கருத்து கேட்ட ரஜினி.

தற்போது ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 15ம் தேதி படப்பிடிப்பை துவங்குகிறார்கள். அன்றே படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

ALSO READ  Official: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துணிவு படத்தின் வெளியீட்டுத் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Also Red: தளபதி விஜய் ஒரு நாள் அழைப்பார் என்று காத்திருக்கும் பா. ரஞ்சித்

அவருக்கு அரசியல் வேலை இருபப்தால் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் இருந்தாலும் வீடியோ கால் மூலம் அரசியல் வேலையையும் பார்க்கப் போகிறாராம் ரஜினி.

Leave a Reply