Home Cinema News Kollywood: சூது கவ்வும் 2 திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Kollywood: சூது கவ்வும் 2 திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

0

Kollywood: 2013-ல் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தை தயாரித்தவர் சி.வி. குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்டின் கீழ, 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார், பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்தனர்.

Also Read: விக்ரம் காட்டுமிராண்டித்தனமான தோற்றத்தின் தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சி.வி. குமார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவித்ர், தற்போது ‘சூது கவ்வும் 2’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி மற்றும் ஒரிஜனால் படத்தில் இருந்து பலர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி கேமியோ தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

‘சூது கவ்வும் 2’ படத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்க திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்டின் நிறுவனம் கீழ இந்த இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளது. கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய, இக்னேஷியஸ் அஷ்வின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் இன்று படப்பிடிப்பு துவங்கி விரைவில் முழு படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version